உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிபள்ளி மாணவன் உயிரிழப்பு

Published On 2023-02-19 09:42 GMT   |   Update On 2023-02-19 09:42 GMT
  • பாப்பாரப்பட்டி அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸில் மோட்டார்சைக்கிள் உரசியது.
  • இதில் நிலை தடுமாறி பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய பூந்தமிழன் உடல் நசுங்கி உயிரிழந்தார்

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் திருப்பதி. கட்டிட மேஸ்திரி. இவரது மகன் பூந்தமிழன் (வயது 17). இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இன்று காலை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். காலை 8 மணி அளவில் பாப்பாரப்பட்டி அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸில் மோட்டார்சைக்கிள் உரசியது.

இதில் நிலை தடுமாறி பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய பூந்தமிழன் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News