உள்ளூர் செய்திகள்

ரம்ஜான் பண்டிகை எதிெராலிமேச்சேரி செம்மறி ஆடு விலை கிடு கிடு உயர்வு

Published On 2023-04-19 15:23 IST   |   Update On 2023-04-19 15:23:00 IST
  • ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
  • விவசாயிகள், சந்தைக்கு குறைந்த அளவில் செம்மறி ஆடுகளை கொண்டு வந்தனர்.

சேலம்:

ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சேலத்தில் மணியனூர், மேச்சேரி, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, மோர்பா ளையம், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடைபெறும். அதன் நேற்று வார சந்தை நடைபெற்றது.

விவசாயிகள், சந்தைக்கு குறைந்த அளவில் செம்மறி ஆடுகளை கொண்டு வந்தனர். இதனால் அதன் விலை பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக மேச்சேரி சந்தையில் 10 கிலோ செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8500 வரை விற்பனையானது.

கடந்த வாரம் 10 கிலோ செம்மறி ஆடு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்ப னையானது. ஆனால் இந்த வாரம் கிடு, கிடு வென கூடுதலாக விலை உயர்ந்தது.

இது குறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறுகையில், வெயில் தாக்கத்தால் ஆடுகளுக்கு மேய்ச்சல் இல்லாததால் அதன் எடை குறைந்து வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க ஆடுகளை விற்க தயக்கம் காட்டுகின்றனர்.

ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி ருசிக்கு செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனை யாகும். தேவை அதிகரித்த நிலையில், கடும் வெயில் தாக்கத்தால் சந்தைகளுக்கு ஆடுகள் வரத்து சரிவால் விலை உயர்ந்துள்ளது, என்றார்.

Tags:    

Similar News