உள்ளூர் செய்திகள்

மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2022-11-13 14:34 IST   |   Update On 2022-11-13 14:34:00 IST
  • வீட்டின் முன்பு இருந்த மாமரத்தின் கிளைகள் அதிகளவில் படர்ந்து இருந்ததை பார்த்தார்.
  • திடீரென எதிர்பாராத விதமாக கிருஷ்ணசாமி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

கோவை,

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 42). விவசாயி.

சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த மாமரத்தின் கிளைகள் அதிகளவில் படர்ந்து இருந்ததை பார்த்தார். அவற்றை வெட்ட முடிவு செய்தார்.உடனே மரத்தின் மீது ஏறி மரகிளைகளை வெட்டினார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிருஷ்ணசாமி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கிருஷ்ணசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

Tags:    

Similar News