உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரிக் பைக் எரிந்து நாசம்

Published On 2022-11-30 07:27 GMT   |   Update On 2022-11-30 07:27 GMT
  • தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.
  • பைக்கில் வைத்திருந்த லைெசன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் காவல் சரகம், தேத்தாகுடி வடக்கு கிராமம், புது ரோடு மரமில் எதிரில் மாட்டு தீவன கடை நடத்தி வருபவர் சண்முகம். இவரது மகன் வேலவன்.

இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக எலக்ட்ரிக் பைக் வைத்து பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.

பின்னர் வெளியில் செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை சாவி போட்டு ஸ்டார்ட் செய்தார்.

அப்போது திடீரென பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இந்த தீ விபத்தில் பைக் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

மேலும் பைக்கில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்கள், லைெசன்ஸ் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News