திருப்புறம்பியம் கோவிலில் புதிய தேர் அமைக்கும் பணி மும்முரம்
- 27 அடி உயரமுள்ள புதிய மரத்தேர் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- தற்போது அந்த காலை தேரின் மேற்பகுதியில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
சுவாமிமலை:
கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசாமி கோவில் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரூ.55 லட்சம் செலவில் 27 அடி உயரமுள்ள புதிய மரத்தேர் அமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர் வடிவம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகிற மாசி மாதத்தன்று தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அலங்கார கால் வடிவ மைக்கும் பணி முடிந்து தற்போது அந்த காலை தேரின் மேற்பகுதியில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதேபோல், திருச்சியில் உள்ள பிஹெச்எல் நிறுவனம் தேருக்கான சக்கரங்களை தயார் செய்து விட்டனர்.
சக்கரங்கள் வந்தவுடன் அதனை தேரில் பொருத்தி வருகிற கார்த்திகை மாதம் கடைசி வாரத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என கோவில் கண்கா ணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.