உள்ளூர் செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Published On 2023-07-20 09:09 GMT   |   Update On 2023-07-20 09:09 GMT
  • பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • மூதாட்டியிடம் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு அருகே உள்ள புலவன்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தா (வயது 75).

இவர் சம்பவத்தன்று தனது சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு பாப்பாநாடு கடைவீதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியிடம் தஞ்சாவூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்டனர்.

பின்னர் சிறது நேரத்தில் மூதாட்டி யிடம் இருந்து 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து வசந்தா பாப்பாநாடு போலீசில் புகார் அளி த்தார்.

அதன் பேரில் பாப்பா நாடு இன்ஸ்பெ க்டர் இள ங்கோவன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்க ளை தேடி வருகி ன்றனர். 

Tags:    

Similar News