உள்ளூர் செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

Published On 2022-09-28 09:39 GMT   |   Update On 2022-09-28 09:39 GMT
  • சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
  • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் முத்து (வயது 38). சம்பவத்தன்று இவர் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த அவர்கள் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் பலாதாரம் செய்த முத்துவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் முத்துவை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News