உள்ளூர் செய்திகள்

சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்து கிடக்கும் மரம்.

கனமழையால் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

Published On 2022-08-26 09:51 GMT   |   Update On 2022-08-26 09:51 GMT
  • இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்திலும் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.‌

இரவு 8 மணி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

பின்னர் 10 மணி அளவில் சாரல் பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரி த்தது. கன மழையாக கொட்டி பெய்ய தொடங்கி யது.

தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது.

அதனைத் தொடர்ந்து இடி - மின்னல் அடித்து கொண்டே இருந்தது.

பின்னர் சில மணி நேரம் மழை தெறித்தது. மீண்டும் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக எம்.கே. மூப்பனார் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

இரவு நேரம் என்ப தால் அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக அச ம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

இருந்தாலும் மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

அதில் பெட்டிகடையின் முன்பு தகரத்தால் போடப்பட்ட மேற்கூரை சேதம டைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

இதேபோல் பூதலூர் ,வல்லம், திருவையாறு ,மதுக்கூர், ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

தஞ்சாவூர் -31, வல்லம்-31, குருங்குளம்-21, மதுக்கூர்-17.20, நெய்வாசல் தென்பாதி-12.80, பூதலூர்-8.40.

Tags:    

Similar News