உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு வேலம்மாள் பள்ளி முதல்வர் ஜெபஸ்டின் ராபர்ட் கிளைவ் பாராட்டி பரிசு வழங்கினார்.

தஞ்சை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-11-10 10:09 GMT   |   Update On 2022-11-10 10:09 GMT
  • இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • தஞ்சாவூரை சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாதேஸ், பிரவினா கலந்து கொண்டனர். போட்டியில் அவர்கள் வென்று சாதனை படைத்தனர்.

தஞ்சாவூர்:

ஆந்திரா மாநிலத்தில் 3-வது மினி தென்னிந்திய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு அணி மாணவர்கள் பிரிவில் முதலிடமும், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர்.

இதில் மாணவர் அணியில் தஞ்சாவூரை சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாதேஸ், பிரவினா கலந்து கொண்டனர். போட்டியில் அவர்கள் வென்று சாதனை படைத்தனர்.

இதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களை வேலம்மாள் பள்ளி முதல்வர் ஜெபஸ்டின் ராபர்ட் கிளைவ் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கோவிந்தராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News