உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-06-07 09:40 GMT   |   Update On 2022-06-07 09:40 GMT
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமை வகித்தார். முனைவர் பழனிவேலு வரவேற்றார்.

சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராணி, ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News