உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவர்.
வன்மீகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
- மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின், பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.