ரெயில் மோதி இறந்துபோன சங்கர்.
சின்னசேலத்தில் ரெயில் மோதி வாலிபர் பலி
- சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார்.
- சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சிமாவட்டம் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வர் தங்கராசு. சோடா வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார். இந்த நிலையில் சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்து போனவர் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும் இன்று காலை கடன் கழிக்க தண்டவாளத்தை கடக்கும் போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் சென்ற பயணிகள் ெரயில் மோதி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.