உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2022-07-24 07:21 GMT   |   Update On 2022-07-24 07:21 GMT
  • கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.
  • தூக்கி வீசப்பட்ட சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று புறப்பட்டார்.

வையகளத்தூர் செல்லும் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அரசு பஸ் வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல்சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News