உள்ளூர் செய்திகள்

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2023-03-24 15:47 IST   |   Update On 2023-03-24 15:47:00 IST
  • இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் ஆகவில்லை.
  • மனமுடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சரவணன் (வயது30). இவர் தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News