உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-10-06 10:05 GMT   |   Update On 2023-10-06 10:05 GMT
  • இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
  • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சுவாமிமலை:

சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கீழத்தெ ருவை சேர்ந்தவர் மகேந்திரன்.

இவரது மகன் தேசிகன் (வயது 26).

கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News