உள்ளூர் செய்திகள்
- அருண் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
- வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அருண் (20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அருண் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
அந்த பெண் அருணின் காதலை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அருண் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை குமரவேல் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.