உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-06-10 15:19 IST   |   Update On 2023-06-10 15:19:00 IST
  • தினமும் மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
  • வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தசிராபள்ளி தடத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது25). இவருக்கு மதுக்குடிக்கம் பழக்கம் உள்ளது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் தினமும் அவர் மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

இந்த நிலையில் தனக்கு இன்னும் திருமணமாகததால் மனவேதனையில் காணப்பட்ட முருகேசன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ததனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News