உள்ளூர் செய்திகள்
- மறுநாள் மீண்டும் பட்டறை திறக்க வந்தபோது அங்கு இருந்த லாரி டயர் ஒன்றை காணவில்லை.
- மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது32).
லாரி மெக்கானிக்கான இவர் அதேபகுதியில் ஆட்டோ டீசல் ஒர்க்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 15-ந் தேதி வழக்கம் போல் பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் மீண்டும் பட்டறை திறக்க வந்தபோது அங்கு இருந்த லாரி டயர் ஒன்றை காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிவலிங்கம் மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், கிருஷ்ணகிரி தொன்னையன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த நல்லரசு (32) என்பவர் டயரை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் நல்லரசுவை கைது செய்தனர்.