உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் மதுரை இன்ட்ரான்சாப்ட் எல்எல்பி தொழில்நுட்ப தலைவர் பால வேலாயுதம் பேசிய காட்சி.


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

Published On 2022-06-19 07:54 GMT   |   Update On 2022-06-19 07:54 GMT
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
  • மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பாக தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் "ஜியோன்டஸ்-22" நடைபெற்றது. 3-ம் ஆண்டு மாணவர், தகவல் தொழில்நுட்ப துறை மன்ற துணைத்தலைவர் பாரதி வரவேற்றார்.

இரண்டாம் ஆண்டு மாணவி கவிஷ்கா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை இன்ட்ரான்சாப்ட் எல்எல்பி, தொழில்நுட்ப தலைவருமான பால வேலாயுதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நான் இருப்பதை மிகவும் பெருமையாக உணர்கிறேன். போட்டிகளில் வெற்றியோ, தோல்வியோ முக்கியமில்லை. நமது பங்களிப்பு தான் மிகவும் அவசியம் என்றார். மிடில்வேர் தொழில்நுட்பத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

முடிவில் மாணவர்களின் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். மூன்றாம் ஆண்டு மாணவர், தகவல் தொழில்நுட்பத்துறை மன்ற செயலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

இத்தொழில்நுட்ப கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும், மாணவர்களுக்கு டை இன், மைண்ட் பெஸ்ட், ஹோசன் ஜி, டிரிக்ட்பக் போன்ற பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் முனைவர் சண்முகவேல், முதல்வர் முனைவர் காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படியும்

மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர்ஸ்ரீனிவாசகன் அறிவுறுத்தலின்படியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா, மணிமேகலை, துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News