உள்ளூர் செய்திகள்
- பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம்:
வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா காப்பர் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி விளக்க உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல்,மரக்காணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.