உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் குடோன்  சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-08 07:24 GMT   |   Update On 2023-05-08 09:02 GMT
  • விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மதுபெட்டி ஒன்றுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.8ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8ஆகவும்,வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும் இறக்கு கூலி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் :

விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் மதுபெட்டி ஒன்றுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.8ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8ஆகவும்,வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும்இறக்கு கூலி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வ்ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் தலைவர் மணிகண்டன் , செயலாளர் இளவரசன், கலை ஆகியோர் முன்னிலை வகித்தனார்.முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் பழனி வரவேற்று பேசினார். முடிவில் மேஸ்திரி கலை நன்றி கூறினார்.

Tags:    

Similar News