உள்ளூர் செய்திகள்

வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

தஞ்சை திலகர் திடல் மார்க்கெட்டுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும்

Published On 2022-08-14 10:24 GMT   |   Update On 2022-08-14 10:24 GMT
  • பொருட்களை அழுகாமல் வீணாகாமல் பாதுகாப்பதற்கு குளிரூட்டப்பட்ட அறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • முன்னதாக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை திலகர் திடல் மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், திலகர் திடல் மார்க்கெட்டுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் , பொருட்களை அழுகாமல் வீணாகாமல் பாதுகாப்பதற்கு குளிரூட்டப்பட்ட அறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி சங்க தலைவராக சேவையா, செயலாளராக மணிகண்டன், பொருளாளராக பாலமுருகன், துணைத்தலைவராக அயூப்க்கான், துணைச் செயலாளராக கல்யாணி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, மாநில பொருளாளர் கோவிந்தராஜன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News