உள்ளூர் செய்திகள்

சங்க கூட்டம் நடந்தது.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டம்

Published On 2022-12-03 09:58 GMT   |   Update On 2022-12-03 09:58 GMT
  • திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
  • 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

நீடாமங்கலம்:

வலங்கைமான் அருகே ஆலங்குடியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க இடைக்கமிட்டி கூட்டம் ஒன்றிய தலைவர் மருதையன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ரவி பேசினார்.

மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் மருதையன் கூட்டத்தை நிறைவு செய்தார்.

கூட்டத்தில், வருகிற 26-ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினம் குறித்து திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், வருகிற 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

மேலும் ஜனவரி 6-ம் தேதி நடைபெற இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.எம். முருகையன் நினைவு தினத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News