உள்ளூர் செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீஸ் பிடியில் தப்பிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-21 09:29 GMT   |   Update On 2022-08-21 09:29 GMT
  • வெங்டேசன் என்பவர் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி தப்பி ஓடி அருகில் உள்ள வைக்கோல் போர் மேல் ஏறி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
  • தகவல் அறிந்த வெங்கடேசன் பெற்றோர், உறவினர்கள் ஒன்று திரண்டனர். வெங்கடேசன் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவெலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், ராமலிங்கம், வெங்கடேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது வெங்டேசன் என்பவர் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி தப்பி ஓடி அருகில் உள்ள வைக்கோல் போர் மேல் ஏறி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

தகவல் அறிந்த வெங்கடேசன் பெற்றோர், உறவினர்கள் ஒன்று திரண்டனர். வெங்கடேசன் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவர் உடலை வாங்க மறுத்து அங்கிருந்து எடுத்து செல்லவும் விடாமல் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News