உள்ளூர் செய்திகள்
கொலை நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

கயத்தாறு அருகே பீர்பாட்டிலால் தாக்கி வாலிபர் படுகொலை

Published On 2022-06-23 10:15 GMT   |   Update On 2022-06-23 10:15 GMT
  • கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என்ற விபரம் தெரியவில்லை. அவர் நீலநிற லுங்கி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
  • அவரது கையில் ஆங்கிலத்தில் ஏ.எம். என பச்சை குத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் காது மற்றும் தலைப்பகுதியில் பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் உள்ளது.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கர சாலையில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பால், காசிலிங்கம், மாரியப்பன், தனிப்படை ஏட்டு பிரித்திவிராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என்ற விபரம் தெரியவில்லை. அவர் நீலநிற லுங்கி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.

அவரது கையில் ஆங்கிலத்தில் ஏ.எம். என பச்சை குத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் காது மற்றும் தலைப்பகுதியில் பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் உள்ளது.

மேலும் அவரது உடல் அருகே காலியான பீர்பாட்டில்கள், கோழி இறைச்சி உள்ளிட்டவைகள் கிடந்தன. எனவே நேற்று இரவு நண்பர்கள் சேர்ந்து மது குடித்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் வாலிபரை தாக்கி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News