உள்ளூர் செய்திகள்

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2023-04-05 13:11 IST   |   Update On 2023-04-05 13:11:00 IST
  • தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய பிரவீன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
  • பிரவீன் குமார் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி அடுத்த மேல் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). பங்குனி உத்திர திருவிழாவிற்காக அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் பிரவீன்குமாரும் குழுவாக தீர்த்தம் எடுப்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சாமி கும்பிட்டு காவடி தீர்த்தம் எடுப்பதற்காக அதிகாலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்துள்ளனர்.

அப்போது பிரவீன்குமார் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது பிரவீன்குமார் திடீரென சுழலில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. இதை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய பிரவீன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரவீன்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் குமார் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News