உள்ளூர் செய்திகள்

பலியான அருண்.

அஸ்தியை கரைக்கச்சென்றபோது தாய் கண்முன்னே அருவியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2022-11-03 04:50 GMT   |   Update On 2022-11-03 04:50 GMT
  • தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர்.

சத்திரபட்டி:

மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அருண்(வயது 28). இவர் மாட்டுத்தாவணியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வநாதன் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதற்காக தன் தாயுடன் ஒட்டன்சத்திரம் வந்த அருண் துக்க நிகழ்வில் கலந்து விட்டு உறவினர்களுடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அஸ்தியை கரைக்கச் சென்றார். அஸ்தியை கரைத்து விட்டு அருவியில் குளிக்கச் சென்ற போது அருணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி பலியானார்.

தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர். அதன்பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News