உள்ளூர் செய்திகள்

ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்

Published On 2022-07-02 04:47 GMT   |   Update On 2022-07-02 04:47 GMT
  • பக்கத்து குளியல் அறையில் இருந்து யாரோ தான் குளிப்பதை வீடியோ எடுப்பதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
  • பின்னர் அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

குனியமுத்தூர்:

கோவை வெள்ளலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இளம்பெண் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து குளியல் அறையில் இருந்து யாரோ தான் குளிப்பதை வீடியோ எடுப்பதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து வீடியோ எடுத்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் தங்களது மகளுடன் போத்தனூர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் குளிப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்தது சேலத்தை சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 27) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தனியார் கார் கம்பெனியில் டெக்னிசீயனாக வேலை பார்த்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் விக்னேஷ்குமாரை கைது செய்தனர்.

அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து, அதில் பதிவாகி இருந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்களை அழித்தனர்.

Tags:    

Similar News