உள்ளூர் செய்திகள்
கணவருடன் தகராறு- இளம்பெண் தற்கொலை
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- மனவேதனை அடைந்த கலைச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போரூர்:
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ராஜூ. தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி (வயது28). இவர்களுக்கு 1-வயதில் மகன் உள்ளான்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த கலைச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.