உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை திருட்டு

Published On 2022-09-27 08:45 GMT   |   Update On 2022-09-27 08:45 GMT
  • ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி எல்லம்மாள்.
  • ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மனைவி எல்லம்மாள் (55). இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்து முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக கூறினார். மேலும் இதற்கு நகை அணிந்தபடி புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி எல்லம்மாள் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கழற்றினார். பின்னர் எல்லம்மாளை தனது செல்போனில் இளம்பெண் படம் பிடித்தார். இதைத்தொடர்ந்து குடிக்க தண்ணீர் எடுத்து வரும்படி எல்லம்மாளிடம் அந்த இளம்பெண் தெரிவித்தார். அவர் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்ற போது இளம் பெண் நகையுடன் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News