உள்ளூர் செய்திகள்

உலக உணவு பாதுகாப்பு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது


தியாகதுருகம் அருகே உலக உணவு பாதுகாப்பு தின விழா

Published On 2022-06-08 16:41 IST   |   Update On 2022-06-08 16:41:00 IST
  • தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
  • உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே வீரசோழபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தனியார் கல்லூரி இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், அன்புபழனி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் துணை முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News