உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை

Published On 2023-10-10 06:27 GMT   |   Update On 2023-10-10 06:27 GMT
  • தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
  • கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

செங்குன்றம்:

சோழவரத்தை அடுத்த காரனோடை, லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (வயது25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சரத்பாபுவை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்பாபு அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் ஓட, ஓட விரட்டி சரத்பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

கொலை குறித்து தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கொலையுண்ட சரத்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News