உள்ளூர் செய்திகள்

வண்டலூர் ஊராட்சியில் மகளிர் தின விழா- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2023-03-10 13:21 IST   |   Update On 2023-03-10 13:21:00 IST
  • 7 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தங்க வளையல்கள் மற்றும் மரக்கன்றுகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • 100 துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகள், பிரியாணி வழங்கப்பட்டது.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வண்டலூர் ஊராட்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணா என்ற குணசேகரன் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது.

முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெகன் தேவேந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வரலட்சுமிமதுசூதனன் எம்.எல்.ஏ, காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வி.எஸ்.ஆரா முதன் ஆகியோர் கலந்து கொண்டு உலக மகளிர் தின விழாவை கேக் வெட்டி கொண்டாடினர். 7 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தங்க வளையல்கள் மற்றும் மரக்கன்றுகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

100 துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகள், பிரியாணி வழங்கப்பட்டது. இதில் தி. மு.க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு குழு தலைவி வசந்தா தேவேந்திரன் நன்றி கூறினார்.

Similar News