லூர்தம்மாள் சைமன் முழு உருவச் சிலை திறப்பு
- கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.
- நாகர்கோவில் மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்ட குளச்சல் விசைப்படகு மீன்பிடிப்பவர் நலச்சங்க 50 ஆம் ஆண்டு பொன்விழா, மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் முழு உருவ சிலை திறப்பு விழா மற்றும் மீன்பிடி சங்கம் கடந்து வந்த பாதை புத்தக வெளியீட்டு விழா குளச்சலில் நடைபெற்றது.
சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கடந்து வந்த பாதை என்ற புத்தகத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பங்கேற்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், ஆயர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்று மணிமண்டபம் கட்டப்படும் என உறுதி அளித்த சபாநாயகருக்கு கன்னியாகுமரி மக்கள் சார்பில் நன்றியை விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.