உள்ளூர் செய்திகள்

800 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த காய்கறி வியாபாரி

Published On 2024-02-28 11:15 GMT   |   Update On 2024-02-28 11:15 GMT
  • ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பெருந்துறை டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் வந்தது.

இதனைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ருத்ராஜ், வீரமணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வீட்டில் 800 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் பிரசாத் என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் வீட்டில் சோதனை செய்ததில் ரூ.3.40 லட்சம் ரொக்க பணம், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது பிரசாத் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் தான் எங்கிருந்து குட்கா கொண்டு வரப்படுகிறது. அதை யாருக்கு விற்க கொண்டு செல்கிறார்கள் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News