உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-29 17:53 IST   |   Update On 2022-07-29 17:53:00 IST
  • காரணைப்புதுச்சேரி விநாயகபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி விநாயகபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 34), நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெருமாள் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Similar News