உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே மின்சார ரெயில் மோதி இளம்பெண் பலி: தோழி படுகாயம்

Published On 2023-07-31 07:03 GMT   |   Update On 2023-07-31 07:03 GMT
  • பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • செல்சியாவின் தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாம்பரம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புத்தர் தெருவை சேர்ந்தவர் யாழினி (வயது23).

இவர் நெருங்கிய தோழியான காரைக்குடியை சேர்ந்த செல்சியா (23) என்பவருடன் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று மாலை தோழிகள் இருவரும் தி.நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மின்சார ரெயிலில் செல்ல திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயில் தோழிகள் யாழினி, செல்சியா மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.

இதில் பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தண்டவாளம் அருகே தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்தபோது மின்சார ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் அவர்கள் விபத்தில் சிக்கி இருப்பது தெரிந் தது.

இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News