உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரெயிலில் ஏறியபோது தவறி விழுந்து பெண் பலி

Published On 2023-02-24 14:18 IST   |   Update On 2023-02-24 14:18:00 IST
  • ஓடும் மின்சார ரெயிலில் மல்லிகா ஏற முயன்றார். இதில் அவர் தவறி கீழே விழுந்தார்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது45). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்யவந்தார்.

அப்போது நடைமேடை 4-ல் இருந்து மினசார ரெயில் மெதுவாக புறப்பட்டது. எனினும் ஓடும் மின்சார ரெயிலில் மல்லிகா ஏற முயன்றார். இதில் அவர் தவறி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News