உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே டாஸ்மாக் அதிகாரிக்கு மிரட்டல்
- திருவள்ளூர் அருகே டாஸ்மாக் அதிகாரிக்கு மிரட்டல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் டாஸ்மாக் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட மேலாளராக கமலக் கண்ணன் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவர் பணியில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் திடீரென கமலக்கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மேஜையின் மேல் இருந்த கோப்புகளை தரையில் வீசி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.