உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

Published On 2022-08-14 14:06 IST   |   Update On 2022-08-14 14:06:00 IST
  • புழல்த அடுத்த லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள்.
  • புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புழல்த அடுத்த லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இன்று காலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News