உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
- ஒரு வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது. அப்போது நிலைத்தடுமாறிய தனலட்சுமிய டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- டிராக்டரின் சக்கரத்தில் தனலட்சுமி சிக்கிக்கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் அவ்வழியாக சென்ற டிராக்டரில் டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து பயணம் செய்தார்.
சித்தம்பாக்கம் அருகே சென்ற போது ஒரு வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது. அப்போது நிலைத்தடுமாறிய தனலட்சுமிய டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
அப்போது அதே டிராக்டரின் சக்கரத்தில் தனலட்சுமி சிக்கிக்கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.