உள்ளூர் செய்திகள்

திருவாலங்காட்டில் தலைமை ஆசிரியருக்கு மிரட்டல்- போலீசில் புகார்

Published On 2022-10-01 09:50 IST   |   Update On 2022-10-01 09:50:00 IST
  • திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளியில் 32 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளியில் 32 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு சத்துணவு அமைப்பாளராக ஜெயபாரதி பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவர்களின் மதிய உணவுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகளை 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பள்ளிக்கு வந்து சமையலரிடம் கொடுத்து விட்டு செல்வதாகவும், அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஜெயபாரதியிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.

இதனையடுத்து ஜெயக்குமார் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயபாரதியின் கணவர் சண்முகம் தலைமையாசிரியர் ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சண்முகம் மீது கனகம்மா சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News