மணலி அருகே பெயிண்ட் குடோனில் தீ விபத்து
- மணலி புதுநகர் அருகே விச்சூரில் உள்ள தொழிற்பேட்டையில் முகப்பேரைச் சேர்ந்த கணேஷ்.
- நேற்று இரவு இங்குள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
மணலி புதுநகர் அருகே விச்சூரில் உள்ள தொழிற்பேட்டையில் முகப்பேரைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை உள்ளது.
நேற்று இரவு இங்குள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது.
தகவல் அறிந்ததும் மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம், தட்சிணாமூர்த்தி மற்றும் திருவொற்றியூர், அத்திப்பட்டு, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 5வாகனங்களில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்த வந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.இந்த தீவித்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள், விலை உயர்ந்த பெயிண்ட், தின்னர் மற்றும் பல்வேறு மூலப்பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பலலட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது
தீ விபத்துக்கான காரணம் குறித்து மணலி புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.