உள்ளூர் செய்திகள்
'கூகுள் பே'யில் பணம் அனுப்புவதில் தகராறு- வாலிபர் மீது தாக்குதல்
- ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியும் அவரது நண்பர் இளவரசனும் சேர்ந்து பீர் பாட்டிலால் ஹனிஷ்குமாரை தாக்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி, இளவரசன் ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த கருமாரப்பாக்கத்தை சேந்ந்தவர் ஹனிஷ்குமார்(22). இவர் அப்பகுதியில் உள்ள கடையில் ரூ.10-க்கு தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு "கூகுள் பே" மூலம் பணம் அனுப்புவதாக கடைக்காரர் சுப்பிரமணியிடம் கூறினார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியும் அவரது நண்பர் இளவரசனும் சேர்ந்து பீர் பாட்டிலால் ஹனிஷ்குமாரை தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி, இளவரசன் ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.