உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2022-09-05 12:50 IST   |   Update On 2022-09-05 12:50:00 IST
  • 1-வது நிலையின் 3-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
  • தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பொன்னேரி:

அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இதில் உள்ள இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 1-வது நிலையின் 3-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Similar News