உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் வாங்க மறுப்பு

Published On 2023-05-20 09:14 GMT   |   Update On 2023-05-20 09:15 GMT
  • டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
  • சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர் கூறியுள்ளார்.

சென்னை:

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களுமே அந்த நோட்டை வாங்குவதற்கு மறுத்துவிடுகின்றன.

அந்த வகையில் டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, 'சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை.

இருப்பினும் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் யாராவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்தால் அதனை வாங்குவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News