உள்ளூர் செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை

Published On 2023-07-17 08:46 GMT   |   Update On 2023-07-17 08:46 GMT
  • ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்:

சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான்.இவர் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து உள்ளார்.

நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைத்து இருந்த உயர்ரக செல்போன் அனைத்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் செல்போன்கள் அனைத்தையும் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து செல்வது பதிவாகி உள்ளது. அவர்கள் திட்மிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News