உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

Published On 2022-12-29 09:59 IST   |   Update On 2022-12-29 13:53:00 IST
  • எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
  • கைதான 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் சுமார் 15-க்கும் மேற்பட்ட படகுகளில் 7நாட்களுக்கு பிறகு கடந்த 27-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் மற்றும் சக்திவேல் ஆகிய 4 பேரும் ஒரு படகில் மீன் பிடிக்க சென்று இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீன் பிடிக்க கடலில் வலை வீசி காத்திருந்தனர். அப்போது திடீரென வலைகள் அறுந்து சென்று உள்ளது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் வலையை எடுக்கும் முயற்சியில் கடலில் எல்லை தாண்டி சென்று உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News