உள்ளூர் செய்திகள்

ஆற்காடு அருகே பிரியாணி மாஸ்டர்அடித்து கொலை- மருமகன் கைது

Published On 2022-11-27 12:08 IST   |   Update On 2022-11-27 12:08:00 IST
  • பிரியாணி மாஸ்டர்அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகமதுல்லாவை கைது செய்தனர்.

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மலையடிவாரம் அம்சாத் நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது45) , இவர் வேலூரில் உள்ள ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இஸ்மாயிலின் முதல் மகளின் கணவர் ரகமதுல்லா (30), டிரைவர். அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்தது.

இதுகுறித்து நேற்று இரவு இஸ்மாயில் தனது மருமகன் ரகமதுல்லாவை அழைத்து பேசினார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரகமதுல்லா இஸ்மாயிலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து, மூச்சு பேச்சின்றி இஸ்மாயில் விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இஸ்மாயிலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகமதுல்லாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News