உள்ளூர் செய்திகள்
பெருவிரல் கை ரேகைகளை வைத்து தேசியக்கொடி உருவாக்கிய சிறுமி
- சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் உள்ள மாணவி.
- சிறுமியின் இந்த உலக சாதனை முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியை சேர்ந்த ஜேக்கப் ஞானசெல்வன், எஸ்தர் இவர்களின் மகள் ஜுடித்கிப்டி, தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் உள்ள மாணவி, நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் ஓவியத்தில் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார். 6 x4 அளவிலான வெள்ளை ஓவிய தாளில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை மற்றும் நீலம் ஆகிய அக்ரிலிக் வண்ணங்களை பயன்படுத்தி 7500 முறை பெருவிரல் கை ரேகைகளை கொண்டு இந்திய தேசியக் கொடியை 3 மணி நேரம் 53 நிமிடங்களில் உருவாக்கி உள்ளார்.
சிறுமியின் இந்த உலக சாதனை முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.